சனி, 6 நவம்பர், 2021

இபிஎஸ் எப்போதாவது முல்லைப் பெரியாறு அணையை நேரில் பார்த்தாரா? துரைமுருகன் கேள்வி

 5 11 2021 தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியார் அணையில் இருந்து விதியை மீறி கேரளா பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 9-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரையில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முல்லை பெரியாறு விவகாரத்தில் அதிமுக போராட்ட அறிவிப்பு குறித்து கேட்டபோது,  கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் முல்லை பெரியாறு அணையை எப்போதாவது நேரில் சென்று பார்த்தாரா? என்பதற்கு பதில் சொல்லிவிட்டு போராட்டம் நடத்தட்டும் என கூறியுள்ளார்ஃ.

மேலும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்துகொண்டிருப்பது குறித்து கேட்டபோது, பெரியாறு அணையை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்று கூறினார். இந்த சந்திப்பின்போது  அமைச்சர்கள் பி.மூர்த்தி, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், தி.மு.க. நிர்வாகிகள் இளைஞரணி ராஜா, வாடிப்பட்டி பால்பாண்டி, திருப்பரங்குன்றம் ஒன்றிய சேர்மன் வேட்டையன் உள்பட பலர் இருந்தனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-minister-duraimurugan-say-about-mullai-periyar-dam-issue-365195/

Related Posts: