சனி, 6 நவம்பர், 2021

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு உரிமை இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

 திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர சட்டப்பூர்வமான உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளர்.

இந்தியாவில் பெருகி வரும் கலாச்சார மாறுதல்கள் காரணமாக ஆண் பெண் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வரும் பழக்கம் தீவிரமாகி வருகிறது. விருப்பப்பட்டு சேர்ந்து வாழும் இவர்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்படும்போது பிரிந்து சென்று விடுகின்றனர். முதலில் வெளிநாடுகளில் மட்டுமே இருந்து வந்த இந்த வாழ்க்கை முறை தற்போது இந்தியாவில் பரவலாக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 2010-ம் ஆண்டு குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் முறைக்கு சட்ட அங்கிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் வயது வந்தோராக இருந்தாலும், திருமணமான ஒருவருடன் திருமணம் ஆகாத ஒருவர் சேர்ந்து வாழ சட்டத்தில் அனுமதி இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கோவையை சேர்ந்த கலைச்செல்வி என்பர் தனக்கும் ஜோசப் பேபி என்பவருக்கும் 2013-ல் திருமணம் நடந்து 2016-ம் ஆண்டு முதல் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருவதால், தங்களை சேர்த்து வைக்குமாறு கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் தனக்கும் கலைச்செல்விக்கும் திருமணம் ஆகவில்லை என்று கூறியுள்ள ஜோசப் பேபி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுமாறு மனுதாக்கல் செய்தார்.

இந்த இரு மனுக்களையும் விசாரித்த கோவை நீதிமன்றம், கலைச்செல்வி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து கலைச்செல்வி மேல்முறையிலு செய்த நிலையில், இந்த வழக்கில் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பம் நடத்துபவர்கள் தங்களுக்குள் எழும் பிரச்சனைகளுக்கு குடும்பநல நீதிமன்றத்தை நாட உரிமை இல்லை என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கலைச்செல்வி பணப்பரிவர்த்தனை காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்று ஆதாரப்பூர்வமான நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-living-together-couple-no-rights-for-approach-family-welfare-court-365315/

Related Posts: