வியாழன், 24 ஆகஸ்ட், 2017

சீனப் பொருட்களை தீயிட்டு கொளுத்திய இளைஞர்கள்! August 24, 2017




சூரத் நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீன பொருட்களை தீயிட்டு கொளுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

டோக்லம் விவகாரத்தில் இந்தியாவிற்கு சீனா தொடர்ந்து அச்சுறுத்தல் அளித்து வருகிறது. எல்லைப் பகுதியில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறாவிட்டால் போர் தொடுக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இதனிடையே டோக்லம் விவகாரத்தில் சீனாவை கண்டிக்கும் விதமாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் தேசிய கொடி ஏந்தியவாறு சீனாவை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சீன பொருட்களை தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.