வெள்ளி, 8 செப்டம்பர், 2017

பௌத்த மதத்துறவியொருவர் ரயிலில் குழந்தைகள் ,இளம் பெண்கள் உட்பட பொதுமக்கள் முன்னிலையில் ,ஒரு பெண்ணுடன் சில்மிஷத்தில் ஈடுபடும் காணொளி

பௌத்த மதத்துறவியொருவர் ரயிலில் குழந்தைகள் ,இளம் பெண்கள் உட்பட பொதுமக்கள் முன்னிலையில் ,ஒரு பெண்ணுடன் சில்மிஷத்தில் ஈடுபடும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பரவி வருகின்றது.
பயணித்துக்கொண்டிருக்கும் ரயிலில், இளம் பெண்ணுடன் அவர் செய்யும் காமலீலைகள் அடங்கிய காணொளி தற்போது தீயாக பரவிவருகின்றது.குறித்த ரயிலில் பயணித்த சகபயணியொருவரே குறித்த காணொளியை பதிவு செய்துள்ளார்.
இலங்கையில் எடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் குறித்த காணொளியில், அப்பிக்கு தம் அருகில் அமர்ந்துஇருந்த பெண்ணொருவரின் கையைப் பிடித்தல், கட்டிப்பிடித்தல் பின்னர் முத்தமிடுதல் என அவரது நடவடிக்கைகள் மிகவும் கீழ்த்தரமாக, அருவருக்கத்தக்க வகையில் பார்ப்போரை முகஞ்சுளிக்க வைப்பதாகவுள்ளது.
பொதுப்போக்குவரத்தில் பொதுமக்கள் முன்னிலையில்,குழந்தைகள் மற்றும் பெண்கள் கண் எதிரே, சமூகத்தில் மதிக்கப்படும் துறவியொருவர் இவ்வாறு அநாகரீகமாக நடந்துகொள்வது தற்போது சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts: