...
சனி, 30 ஜூன், 2018
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
By Muckanamalaipatti 2:24 PM
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
பெட்ரோல் ₹ 78.40 /Ltr
டீசல் ₹ 71.12 /Ltr
...
மருந்துப் பொருட்களுக்கான ரசாயனத் தயாரிப்பு ஆலையை மூட உத்தரவு! June 29, 2018
By Muckanamalaipatti 2:16 PM

உதகை அருகே செயல்பட்டு வந்த மருந்துப் பொருட்களுக்கான ரசாயனத் தயாரிப்பு ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.உதகை அருகே உள்ள சாண்டிநல்லாவில், ஸ்டெர்லிங் பயோடெக், என்ற தொழிற்சாலையில், எலும்புகளை கொண்டு மருந்துகளுக்கான ரசாயன மூலப்பொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உருவாகும் ரசாயனக் கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல், அருகில் உள்ள...
உலகின் செல்வந்தர்கள் தங்களது பணத்தை ஸ்விஸ் வங்கியில் செலுத்துவது ஏன்? June 30, 2018
By Muckanamalaipatti 12:14 PM

உலகின் செல்வந்தர்கள் தங்களது பணத்தை ஸ்விஸ் வங்கியில் செலுத்துவது ஏன்? எந்த நாட்டிலும் இல்லாத நம்பகத்தன்மை ஸ்விஸ் வங்கி மீது மட்டும் ஏன் வந்தது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.பாஜக 2014ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு கருப்பு பணத்தை ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்ககளை எடுத்து வருவது நாடே அறிந்தததே - இந்த இலக்கை குறிக்கோளாக கொண்டு நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு...
வெள்ளி, 29 ஜூன், 2018
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது தாமதமாவது குறித்து ப.சிதம்பரம் கருத்து! June 29, 2018
By Muckanamalaipatti 2:21 PM

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க அதிகாரிகளே போதும் என்றால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியையே அமல்படுத்திவிடலாம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது தாமதமாவது குறித்து டிவிட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ள சிதம்பரம், அதிமுகவிற்கு மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி மீது நம்பிக்கை...
நச்சுக்காற்றை சுவாசிக்கிறதா இந்தியா? June 29, 2018
By Muckanamalaipatti 2:18 PM

இந்தியா முழுவதும் ஃபார்மாலிடிஹைட் எனும் நச்சுத்தன்மை கொண்ட வாயு நிறைந்திருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.இதய நோய், புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் இந்தியாவில் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாக காற்று மாசு பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியா மேல் பரவி இருக்கும் காற்றில் உள்ள மாசு குறித்த அதிர்ச்சி புகைப்படம் ஒன்றை...
வியாழன், 28 ஜூன், 2018
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை! June 28, 2018
By Muckanamalaipatti 2:12 PM

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை என்ற அறிவிப்பை அடுத்து கோவையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான பசுமை பைகளின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பசுமை அங்காடியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏதுவாக தயாரிக்கப்பட்டுள்ள துணி பைகள், மண்ணில் மக்க கூடிய பிளாஸ்டிக் இல்லாத பசுமை...
இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா..! June 28, 2018
By Muckanamalaipatti 2:10 PM

வரும் நவம்பர் மாதத்திற்குள், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என, அமெரிக்கா புதிதாக ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், 125 கோடி மக்கள் கொண்ட இந்தியா இதனை எப்படி கொள்ளப் போகிறது ?சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவை சீனா விஞ்சி விடும் என்பது,...
தமிழக அரசு உரிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை!” : பொன்.மாணிக்கவேல் ஐ.ஜி June 27, 2018
By Muckanamalaipatti 2:05 PM

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. மேலும் கோயில்களில் உள்ள சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளை வழங்கி இருந்தது.
இந்த...
ஏழைகளின் தேசமா இந்தியா? June 28, 2018
By Muckanamalaipatti 2:00 PM

வளர்ந்து வரும் நாடு எனக்கூறப்படும் இந்தியா வறுமையால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடு என ஆய்வு முடிவுகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உலகில் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.இப்பட்டியலில் 8 கோடியே 7 லட்சம் பேருடன் ஆப்பிரிக்க நாடான நைஜீரியா முதலிடத்தில் உள்ளது. உலகளவில் 8.5...
புதன், 27 ஜூன், 2018
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு! June 27, 2018
By Muckanamalaipatti 4:43 PM

ஆளுநர் ஆய்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் விளக்கமளிக்காததை அடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அறிக்கை குறித்து பேசினார். அப்போது, ஆளுநர் மாவட்ட அதிகாரிகளை...
கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என அறிவிப்பு! June 27, 2018
By Muckanamalaipatti 4:40 PM

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.உலகில் உள்ள 7 செம்மொழிகளில் முக்கியமானதாக விளங்கும் தமிழ் மொழிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும்...
பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் என தகவல்! June 27, 2018
By Muckanamalaipatti 4:38 PM
பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிப்பதாக அதிர்ச்சிகர ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த தாம்ஸன் ராய்ட்டர்ஸ் என்ற அறக்கட்டளை, பல்வேறு நாடுகளை சேர்ந்த 548 பேரிடம் இதுக்குறித்த இந்த ஆய்வை நடத்தியது.பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல்கள், பெண்ணடிமைத்தனம், பெண்களுக்கு எதிரான...
செவ்வாய், 26 ஜூன், 2018
ராமேஸ்வரத்தில் கிடைத்த ஆயுதக் குவியலின் பின்னணி பற்றிய விசாரணை தீவிரம் June 26, 2018
By Muckanamalaipatti 2:24 PM

VIEWS
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் ஆயிரக்கணக்கான துப்பாக்கித் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோட்டாக்கள் பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதை கண்டறிய போலீசார் தீவிரமாகியுள்ளனர்.ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் மீனவர் எடிசன் என்பவர் அவரது வீட்டில் கழிவுநீர் தொட்டிக்கு நிலத்தை தோண்டியுள்ளார். அப்போது...
தபால் துறை ஊழியர்களின் அஜாக்கிரதையால் நிராகரிக்கப்பட்ட மருத்துவ விண்ணப்பம் June 26, 2018
By Muckanamalaipatti 2:11 PM

சிவகங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் மருத்துவக் கனவு அஞ்சல்துறை ஊழியர்களின் அலட்சியத்தால் கேள்விக்குறியாகியுள்ளது. விரைவு தபாலில் விண்ணப்பம்சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிசெல்வத்தின் மகன் வசந்த், பிளஸ் 2-தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றார். நீட் தேர்வில் 384 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் வசந்த், மருத்துவப்படிப்புக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து,...
திங்கள், 25 ஜூன், 2018
தமிழக ஆளுநருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல் June 25, 2018
By Muckanamalaipatti 2:26 PM

தமிழக ஆளுநர் வரம்பு மீறிய மிரட்டல் போக்கையும், நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றது முதல் மாநில அரசை துச்சமாக கருதி அமைச்சர்களைக் கூட அரங்கிற்குள் அனுமதிக்காமல், அதிகாரிகளை அழைத்து விவாதிப்பது அவரது அதிகார எல்லையை கடந்த செயல்...
அச்சுறுத்தும் நோக்கில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டால் கடும் நடவடிக்கை June 25, 2018
By Muckanamalaipatti 2:20 PM

அச்சுறுத்தும் நோக்கில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படுமானால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை எச்சரித்துள்ளது. ஆளுநர் பன்வாரிலாலின் சுற்றுப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கருப்புக் கொடி காட்டும் போராட்டங்களை நடத்தி வருகிறது. நாமக்கல்லில் கருப்புக் கொடி காட்டியவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்...
ஆளுநர் மாளிகையில் இருந்து வந்துள்ள அறிக்கை மிரட்டல் தொனியில் இருக்கிறது - முத்தரசன் விமர்சனம்! June 24, 2018
By Muckanamalaipatti 10:29 AM

ஆளுநர் மாளிகையில் இருந்து வந்துள்ள அறிக்கை மிரட்டல் தொனியில் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக முறையில் அனுமதிக்கப்பட்ட போராட்டங்களில் ஈடுபடுவோரை கைதுசெய்யும் அடக்குமுறைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழக ஆளுநர் தமக்கு...
விளக்கம் என்ற பெயரில் திமுகவை ஆளுநர் மிரட்டுவதா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்! June 24, 2018
By Muckanamalaipatti 10:25 AM

விளக்கம்” என்ற பெயரில், ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தியின் மூலம், அரசியல் சட்டத்திற்கு முரணாக நேரடி அரசியல் செய்ய ஆளுநர் முயன்றிருக்கிறார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தொடர்பு இணை இயக்குநர் மூலம் செய்தி ஒன்றை வெளியிட்டு, அரசியல் சட்டத்திற்கு முரணாக, ஆளுநர் நேரடி அரசியல் செய்ய முயன்றிருப்பதற்கு,...
பசுமை நாடுகள் பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ள இந்தியா! June 25, 2018
By Muckanamalaipatti 10:23 AM

பசுமை நாடுகள் தரவரிசை பட்டியலில், இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில், உலகளாவிய பசுமை நாடுகளுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. கொலம்பியா பல்கலைகழகமும் உலக பொருளாதார அமைப்பும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்கின்றன.விவசாயம், வனங்களை பாதுகாத்தல், காற்று மாசுபாட்டை...
ஞாயிறு, 24 ஜூன், 2018
ஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன்: விவசாயியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வங்கி மேலாளர்! June 24, 2018
By Muckanamalaipatti 7:56 PM

பயிர்க் கடன் கோரி வங்கியில் விண்ணப்பித்த விவசாயியின் மனைவியை ஆசைக்கு இணங்குமாறு வங்கி மேலாளர் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தின் ததாலா பகுதியில் உள்ள செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு கடந்த ஜூன் 18ஆம் தேதி தனது மனைவியுடன் சென்ற விவசாயி ஒருவர் பயிர்க் கடனுக்காக விண்ணப்பித்திருந்தார்.இந்நிலையில் அந்த வங்கியின்...
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறை
By Muckanamalaipatti 7:53 PM
இன்டர்நெட் வசதி இல்லாமலேயே, எஸ்.எம்.எஸ் வாயிலாக பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வசதியை வருமான வரித் துறை ஏற்படுத்தியுள்ளது.வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவித்த மத்திய அரசு அதற்கு ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசமும் அளித்தது. பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறைகளை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் வருமான வரித் துறை செய்தது.அதன்படி, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கென பிரத்யேக...
ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்புணர்வு குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்! June 24, 2018
By Muckanamalaipatti 4:38 PM

ஜார்கண்ட் மாநிலத்தில் 6 பேர் கொண்ட கும்பலால், NGO அமைப்பில் பணியாற்றி வந்த 5 பெண்கள் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் கடந்த வாரம் செவ்வாய்கிழமையன்று 5 பெண்கள் உட்பட 11 பேர் கொண்ட NGO அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளி ஒன்றில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்....
சனி, 23 ஜூன், 2018
8 வழிச்சாலையை நிச்சயம் எதிர்க்க வேண்டும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் June 23, 2018
By Muckanamalaipatti 7:44 PM

மக்களிள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை நிச்சயம் எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி.கே,ஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவில் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுவதாகக் கூறினார்....
உடுமலை அருகே உயிரை பணயம் வைத்து, ஆற்றை கடக்கும் மலைவாழ் மக்கள்! June 23, 2018
By Muckanamalaipatti 7:42 PM

உடுமலை அருகே உயிரை பணயம் வைத்து ஆற்றை கடக்கும் மலைவாழ் மக்கள் தொடர்பான செய்தி, நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான நிலையில், அங்கு ஆற்றுப் பாலம் கட்ட நிதி ஒதுக்கப்படும், என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில், தளிஞ்சி, மஞ்சம்பட்டி, மூங்கில்பள்ளம், கீழானவயல், தளிஞ்சிவயல் உள்ளிட்ட...
சுரைக்காய் போன்று கசப்புத்தன்மைவாய்ந்த ஜூஸ் பருகுவதால் மரணம் ஏற்படுமா? June 22, 2018
By Muckanamalaipatti 7:33 PM

சுரைக்காய் ஜூஸை பருகிய பெண் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கசப்புத்தன்மை அதிகம் நிறைந்த ஜூஸ் பருகுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் கூறுவது என்ன என்பது குறித்து இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.புனே நகரைச் சேர்ந்த 41 வயது பெண்மணி ஒருவர் தினமும் உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். மிகவும் ஆரோக்கியமான...