சனி, 9 ஜூன், 2018

மொத்த மதிப்பெண்களை விட கூடுதல் மதிப்பெண் அளித்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை! June 9, 2018

Image

பீகாரில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சில மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் அளித்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் தேர்வு வாரியம் சார்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அதில் சில மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண்னான 35-ஐ விட கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இதேபோல் சில மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவியின் மதிப்பெண்ணில் குளறுபடி ஏற்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.