வியாழன், 28 ஜூன், 2018

ஏழைகளின் தேசமா இந்தியா? June 28, 2018

Image

வளர்ந்து வரும் நாடு எனக்கூறப்படும் இந்தியா வறுமையால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடு என ஆய்வு முடிவுகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இப்பட்டியலில் 8 கோடியே 7 லட்சம் பேருடன் ஆப்பிரிக்க நாடான நைஜீரியா முதலிடத்தில் உள்ளது. 

உலகளவில் 8.5 சதவீதம் மக்கள் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 7 கோடியே 2 லட்சம் பேர் வறுமையினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாள் ஒன்றுக்கு 140 ரூபாய்க்கும் கீழ் சம்பாதிப்பவர்கள் மிகவும் வறுமையில் உள்ளவர்கள் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நிலவும் கடுமையான வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும் என கூறப்படுகிறது