ஞாயிறு, 24 ஜூன், 2018

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறை

இன்டர்நெட் வசதி இல்லாமலேயே, எஸ்.எம்.எஸ் வாயிலாக பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வசதியை வருமான வரித் துறை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவித்த மத்திய அரசு அதற்கு ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசமும் அளித்தது. 

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறைகளை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் வருமான வரித் துறை செய்தது.

அதன்படி, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கென பிரத்யேக இணைப்பை வருமான வரித் துறை உருவாக்கியது.

அந்த இணைப்பில் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் பதிவிட்டாலே சிறிது நேரத்தில் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டது உறுதி செய்யப்படும். 

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வசதியை மேலும் எளிமையாக்கும் விதமாக, குறுஞ்செய்தி வசதியை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. 

செல்போனில் UIDPAN என்று டைப் செய்து இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணையும், அதன் பிறகு மீண்டும் இடைவெளி விட்டு 10 இலக்க பான் எண்ணையும் டைப் செய்ய வேண்டும். 

இந்தத் தகவலை 567678 அல்லது 56161 என்ற எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு குறுஞ்செய்தியை அனுப்பினாலே பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.

பான் அட்டையிலும், ஆதார் அட்டையிலும் ஒரே மாதிரியான பெயர் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்தக் குறுஞ்செய்தி வசதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts: