சனி, 2 ஜூன், 2018

தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூர்றாக பேசியதாக பெண் கைது! June 2, 2018

Image

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்து அவதூறாக பேசி, சமூக வலைதளங்களில் பரப்பியதாக சூர்யா தேவி என்ற பெண்ணை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழிசை சௌந்தரராஜன் குறித்து, ஒரு பெண் அவதூறாக பேசி, கடந்தவாரம் சமூக வளைதளங்களில் வெளியிட்டிருந்தார். இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டன.

அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சூர்யா தேவி என்ற பெண்ணை, சென்னை விருகம்பாக்கத்தில் போலீசார் கைது செய்தனர்.

அவதூறு பரப்பியது தொடர்பாக, அந்த பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.