திங்கள், 25 ஜூன், 2018

தமிழக ஆளுநருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல் June 25, 2018

தமிழக ஆளுநர் வரம்பு மீறிய மிரட்டல் போக்கையும், நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Image

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றது முதல் மாநில அரசை துச்சமாக கருதி அமைச்சர்களைக் கூட அரங்கிற்குள் அனுமதிக்காமல், அதிகாரிகளை அழைத்து விவாதிப்பது அவரது அதிகார எல்லையை கடந்த செயல் என கூறியுள்ளார். 

தமிழகத்தில் ஆளுநர்கள் பின்பற்றி வந்த மரபுகள், நடைமுறைகளை மீறிவரும் பன்வாரிலாலை கண்டித்து திமுக ஜனநாயக முறையில் கருப்புக்கொடி அறப்போர் நடத்திவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

திமுகவின் செயலால் ஆத்திரமடைந்த ஆளுநர் சட்டப்பிரிவை சுட்டிக்காட்டி 7 ஆண்டுகள் சிறையில் அடைப்போம் என கூறுவதற்கு, இங்கு ஆளுநர் ஆட்சி நடக்கவில்லை என வைகோ விமர்சித்துள்ளார். 

தமிழக தொழில்முனைவோர்கள் தன்னை சந்திக்கலாம் என எந்த சட்டப்பிரிவின் கீழ் ஆளுநர் அழைப்பு விடுத்தார் என கேட்டுள்ள வைகோ, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  தனது வரம்பு மீறிய மிரட்டல் போக்கையும், நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும் வைகோ கோரியுள்ளார்.

Related Posts: