Home »
» ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த மாணவி! June 7, 2018
விருத்தாச்சலம் அருகே அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள சு.கினனூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் 13வயது மகள் மகாலட்சுமி கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பள்ளி சென்ற அவர், பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்த மாணவியை, ஆசிரியர்கள் மீட்டு, கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில், 30 நிமிடங்கள் உயிருக்கு போராடிய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், போதிய மருத்துவர்கள நியமிக்கக் கோரியும், பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிதம்பரம் - விருத்தாசலம் சாலையில் மறியில் ஈடுபட்டனர்.
Related Posts:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு – உயர்நீதிமன்றம் தீர்ப்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும். ஆலை திறப்பு தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்… Read More
டிசம்பர் வரை பள்ளிகள் மூடப்படுமா? மத்திய அரசு விளக்கம்டிசம்பர் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வரும் நிலையில்,”மத்திய அரசு இதுவரை அத்தகைய முடிவை எடுக்கவில்லை” என்… Read More
சமூக இடைவெளியின்றி மதுவாங்க திரண்ட குடிமகன்கள்! தமிழகத்தில் இன்றும் நாளையும் டாஸ்மாக் மதுபான கடைகள் அடைக்கப்படும் நிலையில், மதுரையில் நேற்று சமூக இடைவெளியின்றி குடிமகன்கள் மதுவாங்குவதற்கு திரண… Read More
தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பலி எண்ணிக்கை! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது. … Read More
நிலமும் வனமும் எங்களுக்கானவை! சுதந்திர தினத்தில் உரிமைக்காக போராடிய காடர் பழங்குடியினர்… எரவாளார், மலசர், மலைமலசர், புலையர், காடர், முதுவர் என்று பல்வேறு பழங்குடி மக்களின் தாயகமாக விளங்குகிறது மேற்கு தொடர்ச்சி மலை. காடர்கள் கவரக்கல்,… Read More