வெள்ளி, 15 ஜூன், 2018

இந்தியாவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்! June 15, 2018

Image

இந்தியாவில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து நிதி ஆயோக் அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த செய்தி தொகுப்பு..

இந்தியா மிக மோசமான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக்கின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

2030ஆம் ஆண்டில் இந்தியாவின் தண்ணீர் தேவை 2 மடங்காக அதிகரித்திருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

தற்போதுள்ள தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்தால், நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தண்ணீர் பஞ்சத்தால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதம் வரை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

2020ஆம் ஆண்டில் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீரே இல்லாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

தூய்மையான குடிநீர் கிடைக்காமல் இந்தியாவில் ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவில் உள்ள 70 சதவீத நீர்நிலைகள் அசுத்தமான நிலையை அடைந்து வருவதாக நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

தண்ணீரின் தரம் சிறந்து விளங்கும் 122 நாடுகளின் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கி 120 இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது