
உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க அதிகாரிகளே போதும் என்றால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியையே அமல்படுத்திவிடலாம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது தாமதமாவது குறித்து டிவிட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ள சிதம்பரம், அதிமுகவிற்கு மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி மீது நம்பிக்கை இல்லை என்றால் தமிழ்நாடு அரசில் அமைச்சர்கள் எதற்கு எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசை ஏன் மக்கள் பிரதிநிதிகள் நடத்த வேண்டும்? என்றும் சிதம்பரம் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். தமிழக அமைச்சர்கள் பதவி விலகி குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற வழிவகுக்கலாமே என்றும் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.