Home »
» இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தலில் 74 சதம் வாக்குப்பதிவு! November 10, 2017
இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.68 தொகுதிகள் உடைய இமாச்சல் சட்டசபைக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. போட்டியிட்ட 337 வேட்பாளர்களில் 19 பெண்கள். இந்தியாவின் அதிக வயது வாக்காளரான 101 வயது ஷ்யாம் சரண் நெகி, கின்னார் தொகுதியில் 11வது முறையாக வாக்களித்தார்.இமாச்சல் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 18ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts:
இந்தியாவில் 90% பணியாளர்களின் பிரச்னைகளை நிறுவனங்கள் முறையாக கையாளவில்லை! - ஆய்வில் தகவல் இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் நிலை பற்றி ‘ஜாப் புஸ்’ என்கிற அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் பதில் அளித்த பணியாளர்களின் கருத்துக்களைக் கொண்டு இந்தியாவில் பணியாளர்கள் மற்றும் நிறுவன தலைமைகளுக்கு இடையே உள்ள உறவு பற்றி ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் படி, 25% பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தலைமை சிறப்பாக செயல்படுவதாகவும், 35% பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தலைமை நிறைவாக இருப்பதாகவும், 40% பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தலைமையின் மேலாண்மை மோசமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆய்வில் 40% பணியாளர்கள் தங்களது பணிக்கு தேவையான வசதிகள் இருப்பதாகவும், 60% பணியாளர்கள் தேவையான வசதிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், நிறுவனத்தலைமை தங்களுடன் உரையாடும் விதத்தில் திருப்தி என்று 5% பேரும், தங்கள் நிறுவனம் தங்களோடு உரையாடும் விதத்தில் திருப்தி இல்லை என்று 95% பேரும் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களது பிரச்சனைகளை நிறுவனம் சரியான முறையில் கையாள்கிறது என்று 10% பேரும், நிறுவனம் தங்களது பிரச்னைகளைக் கண்டுகொள்வதேயில்லை என்று 90% பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். இந்திய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் மீது கவனம் செலுத்தும் விஷயமாக மன அழுத்தத்தை எப்படி கையாள்வது என்ற பயிற்சியே முக்கியத்துவம் வகிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர் நடமாட்டம் காரணமாக ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் வந்த அகதிகளை கடற்கொள்ளையர்கள் கடலில் தள்ளி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி… Read More
வெளிநாட்டு சிறைகளில் 7,620 இந்தியர்கள்..!! August 11, 2017
வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் இந்தியர்கள் 7,620 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் தெரிவித்துள்ளார். மக்களவையி… Read More
தொலைபேசி உரையாடல், வாட்ஸ் அப்-ஐ கண்காணிக்க மத்திய அரசின் தொழில்நுட்பம் ரெடி! August 11, 2017
இந்தியாவில் நடக்கும் தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளையும் கண்காணிக்க மத்திய அரசு தொழில்நுட்பம் ஒன்றைத் தயார… Read More
இந்தியாவில் 90% பணியாளர்களின் பிரச்னைகளை நிறுவனங்கள் முறையாக கையாளவில்லை! - ஆய்வில் தகவல் August 11, 2017
இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் நிலை பற்றி ‘ஜாப் புஸ்’ என்கிற அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில்… Read More
பாகிஸ்தானை தனியாக பிரித்தது ஏன் ? சகோதரர் வேல்ராஜ் அவர்களின் கேள்விக்கு பதில்.....!!
… Read More