வெள்ளி, 30 நவம்பர், 2018

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல விவசாயிகள் திட்டம்! November 30, 2018

வேளாண் கடனை தள்ளுபடி செய்யக் கோரி டெல்லியில் குவிந்துள்ள விவசாயிகள், திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை நோக்கி இன்று பேரணியாக செல்வோம் என அறிவித்துள்ளனர். விவசாய விளை பொருட்களுக்கு  லாபகரமான விலை வழங்கவேண்டும் - பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி,டெல்லியில் மாபெரும்...

திமுக தலைமையில் தோழமை கட்சிகள் கூட்டம்: மேகதாது அணைக்கு எதிராக சிறப்பு தீர்மானம்! November 29, 2018

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து, டிசம்பர் நான்காம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து...

விடுதலை புலிகள் வெளியிட்ட அறிக்கை; இலங்கை அரசு பேரதிர்ச்சி! November 29, 2018

இலங்கை இறுதிக்கட்ட போரில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் எனவும் அந்த இயக்கம் தற்போது எங்கள் நாட்டில் இல்லையெனவும் கூறி வந்த இலங்கை அரசுக்கு தற்போது பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் விடுதலை புலிகள் வெளியிட்ட அறிக்கைதான்.  இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது கடந்த 2009ம் ஆண்டு விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என அறிவித்த அந்நாட்டு அரசு, அதற்கான புகைப்படங்களை வெளியிட்டு உலக தமிழர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது....

சிலைகளின் நாயகன் பொன்.மாணிக்கவேல்! November 30, 2018

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவைக் கூடுதலாகக் கவனித்து வந்த ரயில்வே போலீஸ் ஐஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக் காலம் இன்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. பொன்மாணிக்கவேல்.... மிடுக்கான நடை... கம்பீரமாக தோற்றம்... யாருக்கும் அஞ்சாத தீரம்... இவரின் தோற்றத்தைப் பார்க்கும் யாரையும் வசீகரிக்கும் நிஜக் காவல் அதிகாரி... பெரும் முதலாளிகளின் அந்தப்புரங்களில் புதைந்துக் கிடந்த கோவில் சிலைகளில்,...

வியாழன், 29 நவம்பர், 2018

மெரினா கடற்கரையில் கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட நுரைக்கு என்ன காரணம்? November 29, 2018

பருவமழை துவங்கும் போது சென்னையில் கடற்கரை பகுதியில் தொடர்ந்து நுரை ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. கடந்த வியாழக்கிழமை மெரினா முதல் பெசண்ட் நகர் வரை உள்ள கரைப்பகுதி முழுவதும் நுரை காணப்பட்டது, இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன? பார்ப்பதற்கு மட்டும் அல்ல நின்று சுவாசிப்பதற்கு கூட முடியாத நிலையில் இருக்கும் இந்த இடம் தான் கூவம் நதியின் முகத்துவாரம். இதே போல் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழில் மிகுந்து காட்சி அளித்த...

புதன், 28 நவம்பர், 2018

பூமியை கண்காணிக்கும் Hy-SIS செயற்கைகோளை நாளை விண்ணில் ஏவுகிறது இந்தியா! November 28, 2018

பூமியை கண்காணிக்கும் Hy-SIS செயற்கைகோள் நாளை பி.எஸ்.எல்.வி-சி 43 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ள நிலையில், அதற்கான 28 மணிநேர கவுண்டவுன் இன்று காலை 5.57 மணிக்கு துவங்கியது. பூமியின் நிலப்பகுதி, வானிலை உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் Hy-SIS செயற்கைகோளை, பி.எஸ்.எல்.வி-சி 43 ராக்கெட் மூலம் இஸ்ரோ, நாளை காலை 9.57 மணிக்கு விண்ணில் ஏவ உள்ளது. இந்த ராக்கெட்...

மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டமன்ற தேர்தல்! November 28, 2018

மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.  இதையொட்டி, இரண்டு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தமுள்ள, 230 தொகுதிகளில், இரண்டாயிரத்து 907 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 5 கோடி வாக்காளர்கள்...

விடுதலை புலிகள் இயக்கம் சார்பில் வெளியான அறிக்கையால் பரபரப்பு! November 28, 2018

தமிழீழத்தை மீட்டெடுக்க மாவீரர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து போராடுவோம் என்று விடுதலை புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது. விடுதலை புலிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெயருக்காகவும், புகழுக்காகவும் தமது வீரர்கள் போராடவில்லை என்றும் இனம், மொழி, பண்பாடு மீதான அடக்குமுறைக்கு எதிராகவே போராடியதாக தெரிவித்துள்ளது. கொத்துக்குண்டுகள் வீசி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை,...

பனிப்பொழிவால் குட்டி சிம்லாவாக மாறிப்போன உதகை! November 28, 2018

உதகையில் உறைபனிப் பொழிந்து வருவதால் அதிகாலை நேரங்களில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல புல்வெளிகள் காட்சி அளித்து வருகின்றன.  மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம்  வரை பனிக்காலம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு புயல் மற்றும் தொடர் மழை பொய்து வந்ததால் பனிப்பொழிவு தாமதமானது. கடந்த சில தினங்களாக கடும் குளிர் நிலவி வந்த நிலையில் நீர் பனிப்பொழிவு...

​மத உணர்வுகளை காயப்படுத்தியதாக செயற்பாட்டாளர் ரெஹனா ஃபாத்திமா கைது! November 27, 2018

கேரள மாநிலம் சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதியளித்து உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்த நிலையில் கடந்த அக்டோபர் 19ம் தேதியன்று மலைக்கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ரெஹனா ஃபாத்திமா என்ற 31 வயது இளம்பெண் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த கவிதா ஆகியோர் செல்ல முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் அய்யப்ப பக்தர்களின் கடும் போராட்டத்தையடுத்து சபரிமலையில் பக்தர்களை தவிர்த்து செயற்பாட்டாளர்களுக்கு அனுமதியில்லை என்று...

இன்ஜினியரிங் படிப்பை முடிக்காமல் திணறிவந்த மாணவனை வீட்டிற்கு அனுப்பிய நீதிமன்றம்! November 27, 2018

குருஷேத்ரா பல்கலைக் கழகத்தில், கடந்த 9 வருடங்களாக பி.டெக் பட்டத்தை முடிக்க முடியாமல் திணறிய மாணவன் அளித்த கருணை மனுவை ஹரியானா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.17 பாடங்களில் இன்னும் தேர்ச்சியடையாமலிருக்கும் அந்த மாணவன், 2009ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்துள்ளார். இத்தனை ஆண்டுகளாகியும் தேர்ச்சியடைய முடியாமல் திணறிவந்துள்ள அவர் மீதமுள்ள பாடங்களில் தேர்ச்சியடைய...

செவ்வாய், 27 நவம்பர், 2018

If you had $430 million dollars, would you feed the poor or build a massive statue? From our all-video page teleSUR Play.

Source: FB Kaalaimalar 2.0...

​திருடிய பெட்டியை திறந்தபொழுது பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! November 26, 2018

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் வசிக்கும் பெண் ஒருவர் பொருள் ஒன்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். அந்த பொருள் அவரது வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அந்த பெட்டியை வீட்டு வாசலிலேயே வைத்துச்சென்றுவிட்டார் டெலிவரி செய்பவர். ஆர்டர் செய்யப்பட்ட பொருள் வீட்டு வாசலிலேயே வைக்கப்பட்டதை பார்த்த பக்கத்துவீட்டு பெண்மணி, அந்த பெட்டியை  யாருக்கும் தெரியாமல்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது : மத்தியக்குழுவின் தலைவர் பேட்டி! November 26, 2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது என்று, கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வரும் மத்தியக்குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சக இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் மத்தியக் குழு கடந்த இரு தினங்களாக கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்று நாகை மாவட்டம்...

திங்கள், 26 நவம்பர், 2018

எஸ் பி யதிஷ் சந்திரா இட மாற்றம்! November 26, 2018

சபரிமலை நிலக்கலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ் பி யதிஷ் சந்திரா மாற்றம். ஏற்கனவே வகித்து வந்த திருச்சூர் கமிஷனராக மாற்றி கேரளா அரசு உத்தரவு.சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி பாஜகவினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து சரண கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டத்தை கட்டுப்படுத்த நிலக்கல், பாம்பை,...

டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலை 8 சதவீதம் வரை உயர்கிறதா? November 25, 2018

டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலை, அடுத்த மாதம் முதல் உயரும், என தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சுங்க வரி உயர்வு எதிரொலியாக, வீட்டு உபோயகப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் செலவு, கணிசமாக அதிகரித்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என பண்டிகைக் காலத்தில் வீட்டு உபயோகப் பொருட்களின்...

​ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விவகாரத்தில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! November 26, 2018

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் முன்ஜாமின் கோரி தொழிலதிபர் வேணு சீனிவாசன், முத்தையா ஸ்தபதி, அறநிலையத்துறை ஆணையர் திருமகள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன்,...

கஜா புயல் பாதித்த பகுதிகளில், இன்றுடன் நிறைவடைகிறது மத்திய குழுவின் ஆய்வு! November 26, 2018

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, இன்று நாகை மாவட்டத்தை பார்வையிட உள்ளது.இன்று காலை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட கிராமங்களில், பாதிப்புகளை பார்வையிடும் மத்திய குழு, பின்னர் மாலையில் காரைக்கால் சென்று, அங்கு பாதிப்புகளை பார்வையிடுகின்றனர். இன்றுடன் தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு ஆய்வு பணியை முடித்துக் கொண்டு...

​ செவ்வாயில் இன்று தரையிறங்குகிறது நாசாவின் இன்சைட் விண்கலம்! November 26, 2018

ஆறு மாத விண்வெளி பயணத்திற்கு பின்னர், நாசாவின் இன்சைட் விண்கலம் செவ்வாயில் இன்று தரையிறங்குகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழல் நிலவுகிறதா இல்லையா என்பதை அறியவும், ஆய்வு செய்யவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இன்சைட் விண்கலத்தை, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அனுப்பியது. கலிபோர்னியா நகரில் விண்ணில் பறந்த இன்சைட் விண்கலம், சுமார் 50 கோடி கிலோ...

டெல்டாவை தாக்கிய கஜா; மெரினாவில் கரை ஒதுங்கிய அரிய வகை ஜெல்லி மீன்! November 26, 2018

சென்னை மெரினா கடற்கரையில் அரிய வகை ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்னர், வங்கக்கடலில் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தென்னை, நெல் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலையில், அண்மையில் மெரினா கடற்கரையில் அரிய வகை ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது...

ஞாயிறு, 25 நவம்பர், 2018

திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை; நண்பர்களாகத்தான் இருக்கிறோம் - தொல்.திருமாவளவன் November 25, 2018

திமுக கூட்டணியில் தாங்கள் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் வந்த திருமாவளவனை, மாவட்ட ஆட்சியாரால் பணி நீக்கம் செய்யப்பட்ட 48 துப்புரவு தொழிலாளர்கள் நேரில் சந்தித்து தங்களின் நிலை குறித்து எடுத்துரைத்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி 48 துப்புரவு தொழிலாளர்களை...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டிய நாட்டுபுற கலைஞர்கள்! November 25, 2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தருமபுரியில் நாட்டுபுற கலைஞர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து நிதி திரட்டினர்.தருமபுரி மாவட்டத்தில் உள்ள நாட்டுபுற கலைஞர்கள் மற்றும் பம்பை இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து இப்பணியில் ஈடுபட்டனர். தருமபுரி கோட்டை காமாட்சியம்மன் கோயிலிருந்து ஊர்வலமாக பம்பை அடித்துக்கொண்டும், நடனம் ஆடியும் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து...

சனி, 24 நவம்பர், 2018

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் November 24, 2018

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுவதாக கூறினார். தமிழகத்தில் இந்த பருவத்தில் 33 சென்டிமீட்டர் மழை பொழிய வேண்டும் என்றும், ஆனால் 30...

மணப்பாறையில் ஒன்பதாவது நாளாக மின் இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் சாலைமறியல்! November 24, 2018

மணப்பாறையில் ஒன்பதாவது நாளாக மின் இணைப்பு தரவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர்.மணப்பாறையில் கடந்த வெள்ளிக்கிழமை கஜா புயலின் சூறைக்காற்று வீசியதில் வரலாற்றில் முதன் முறையாக புயல் காற்றின் பாதிப்பை மக்கள் உணர்ந்துள்ளனர். 3000-க்கும் மேலான மரங்களும், 1500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், ஆயிரத்துக்கு மேலான வீடுகளின் மேற்கூரைகளும் இந்த புயலின் தாக்கத்தில்...

ரயில் மறியல்: நாகர்கோவிலில் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 400 பேர் கைது! November 24, 2018

கன்னியாகுமரி விரைவு ரயிலை சரியான நேரத்தில் இயக்கக்கோரி, நாகர்கோவிலில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 400 பேர் கைது செய்யப்பட்டனர்.நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸ்டின், சுரேஷ் ராஜன், பிரின்ஸ், ராஜேஸ்குமார்...

பெங்களூரூ வழியாக சென்னை - மைசூரு இடையே புல்லட் ரயில் சேவை? November 24, 2018

சென்னை - மைசூரு நகரங்களுக்கு இடையிலான புல்லட் ரயில் சேவை திட்டம் குறித்த சாத்தியக்கூறு அறிக்கை ஜெர்மன் அரசு சார்பில் இந்திய ரயில்வேயிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அரக்கோனம், பெங்களூரு வழியாக சென்னை முதல் மைசூரு வரையிலான 435 கிமீ நீள தூரத்திற்கான புல்லட் ரயில் சேவை வழங்கும் வகையிலான திட்டத்திற்கான சாத்தியக் கூறு அறிக்கையை இந்திய ரயில்வேயின் தலைவர் அஷ்வானி லோஹானியிடம் ஜெர்மன் நாட்டிற்கான தூதர் மார்டின் நே நேரில் அளித்துள்ளார். இந்த சாத்தியக்கூறு சோதனை...

வெள்ளி, 23 நவம்பர், 2018

குழந்தைகள் கடத்தலை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! November 23, 2018

காப்பகங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து வைக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் நடைபெற்று வரும் குழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மொத்தம் 1,274 குழந்தை காப்பகங்கள் இருப்பதாகவும், அதில் 3 காப்பகங்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.அத்தகைய...

அந்தமான் சாண்டினல் தீவிற்கு சென்ற அமெரிக்க இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்: திடுக்கிடும் தகவல்கள்! November 23, 2018

அந்தமானில் உள்ள சாண்டினல் தீவுக்கு சென்ற அமெரிக்க இளைஞர் மீது அம்பு எய்தி கொலை செய்த பழங்குடியினர் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கருத்த தேகம், கைகளில் வில் அம்பு, கொடூர முகத்துடன் இருப்பவர்கள் சாண்டினல் பழங்குடியினர். கற்கால நாகரீகத்தின் எச்சமாக இன்றும் அந்தமானின் வடக்கே உள்ள சாண்டினல் தீவில், இவர்கள் வசித்து வருகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக வெளியுலக தொடர்பே...

ஹார்வார்ட் பல்கலை-யின் மாணவ அமைப்பு தலைவரானார் இந்திய வம்சாவளிப் பெண்! November 23, 2018

புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்பு தலைவராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தற்பொழுது அமெரிக்காவில் வசித்துவருபவர் பழனியப்பன். இவர், கடந்த 1992ம் ஆண்டு தன் குடும்பத்துடன் சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்துள்ளார். இவருடைய மகள் ஷ்ருதி பழனியப்பன். 20 வயதே ஆன இவர், புகழ்பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்பு...

யார் இந்த யதீஷ் சந்திரா? November 23, 2018

கேரளாவில் சபரிமலைக்கு தொண்டர்களுடன் செல்வதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுத்ததுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்ட ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் சந்திராவின் நடவடிக்கை சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.இந்த வீடியோவிற்கு பிறகு சமூகவலைதளங்களில் ஹீரோ அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் கேரள ஐபிஎஸ் அதிகாரியான யதீஷ் சந்திரா.. நேற்றைய தினம் முதல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபராகவும் யதீஷ் சந்திரா உள்ளார். இவரது கம்பீரமான மற்றும் கறாரான போக்கிற்கு...

வியாழன், 22 நவம்பர், 2018

எமது பகுதி கஜா புயல் பாதிப்பின் தொகுப்பு - 16 /11/2018 -Part 7

photography : Muhamed Buhary hammed Buhary&nbs...

எமது பகுதி கஜா புயல் பாதிப்பின் தொகுப்பு - 16 /11/2018 -Part 6

photography : Muhamed uhary ...

எமது பகுதி கஜா புயல் பாதிப்பின் தொகுப்பு - 16 /11/2018 -Part 5

Photography : Muhamed Buhary&nbs...

எமது பகுதி கஜா புயல் பாதிப்பின் தொகுப்பு - 16 /11/2018 -Part 4

Photography : Muhamed Buhary&nbs...

எமது பகுதி கஜா புயல் பாதிப்பின் தொகுப்பு - 16 /11/2018 -Part 3

Photography : Muhammed Buhary...