சனி, 24 நவம்பர், 2018

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் November 24, 2018

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுவதாக கூறினார். தமிழகத்தில் இந்த பருவத்தில் 33 சென்டிமீட்டர் மழை பொழிய வேண்டும் என்றும், ஆனால் 30 சென்டிமீட்டர் தான் பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் மழை அளவு இயல்பை விட 9 சதவீதம் குறைந்துள்ளதாகவும், சென்னையில் இயல்பை விட 45 சதவீதம் குறைந்துள்ளதாகவும் புவியரசன் கூறினார்