சனி, 24 நவம்பர், 2018

ரயில் மறியல்: நாகர்கோவிலில் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 400 பேர் கைது! November 24, 2018

Image

கன்னியாகுமரி விரைவு ரயிலை சரியான நேரத்தில் இயக்கக்கோரி, நாகர்கோவிலில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸ்டின், சுரேஷ் ராஜன், பிரின்ஸ், ராஜேஸ்குமார் மற்றும் விஜயதரணி உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, கேரள மாநிலம் கொச்சுவெளிக்கு கன்னியாகுமரி விரைவு ரயிலை இயக்கக் கூடாது என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ரயிலை மறித்து போராடியதால் அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.