புதன், 28 நவம்பர், 2018

மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டமன்ற தேர்தல்! November 28, 2018

Image


மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. 
இதையொட்டி, இரண்டு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் 230 தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தமுள்ள, 230 தொகுதிகளில், இரண்டாயிரத்து 907 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதேபோன்று வடகிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 
இங்கு, 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வட கிழக்கு மாநிலங்களில் மிசோரமில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளதால், அதனை தக்க வைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு மாநிலங்களுக்கும் வரும் டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 

Related Posts: