ஞாயிறு, 11 நவம்பர், 2018

ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் நம்பிக்கையுடன் உள்ளது - ப.சிதம்பரம் November 11, 2018

Image

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் நம்பிக்கையுடன் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்களவைத் தேர்தலுக்காக மாநிலங்கள் வாரியாக அமைக்கப்படும் கூட்டணி, ஒவ்வொரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால், அது மகாபந்தன் கூட்டணியின் மாபெரும் வெற்றியாக கருதப்படும் எனக் கூறினார். 

மேலும், மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், RSS பயிற்சிகளுக்கு அரசு இடங்களில் அனுமதி மறுக்கப்படும் என்றும், அரசு ஊழியர்கள் அது போன்ற பயிற்சிகளில் பங்கேற்பது தடுத்து நிறுத்தப்படும் எனவும் கூறினார்.