வியாழன், 22 நவம்பர், 2018

இனி பான் கார்டு விண்ணப்பத்தில் தந்தை பெயர் கட்டாயமில்லை! November 22, 2018

Image


பான் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்கள் தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என்ற வருமான வரித்துறையின் அறிவிப்பு வரும் டிசம்பர் 5ம் தேதி முதல் அமலாகிறது. 

பான் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர், அவரது தாயாரால் வளர்க்கப்படுபவராக இருந்தால், தந்தை பெயரை குறிப்பிடத் தயங்குவார்கள். எனவே, இதுபோன்ற அசவுகரியங்களை தவிர்க்கும் பொருட்டு, இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. 

இது, வரும் டிசம்பர் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய நேர்முக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர் தாயால் வளர்க்கப்படுபவராக இருந்தால், அவர் தாயின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Posts:

  • வஸிய்யத் இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ் வஸிய்யத்தைப் பற்றி திருக்குர்ஆனில் கூறிக் காட்டுகிறான். "இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்… Read More
  • Q & A - PJ இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வதற்கு முன்பு பதிவுத்திருமணம் செய்து வைப்பது இஸ்லாத்தில் கூடுமா?அஹ்மத்இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் நாம் எழுதி… Read More
  • Special Bayan TNTJ Arrange Special Bayan at TNTJ Markas on 03/11/2013-time 04:00 PM, all brothers and sisters are invited, to know Islam - As guided of Muhammed (s… Read More
  • வித்ர் தொழுகை வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.ஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் வித்… Read More
  • Salah (Prayer) Time-Nov 2013 Read More