Home »
» டெங்கு, பன்றிக்காய்ச்சல் எதிரொலி : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு! November 12, 2018
தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட காய்ச்சல்கள் வேகமாக பரவி வருவதால், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் சசிதரன் - ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உயிரிழந்தோர் எண்ணிக்கை, காய்ச்சலை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து வரும் 20ம் தேதி சுகாதாரத்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
source: http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/12/11/2018/dengue-and-swine-flu-echo-chennai-high-court-madurai-branch-action
Related Posts:
இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தலில் 74 சதம் வாக்குப்பதிவு! November 10, 2017
இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.68 தொகுதிகள் உடைய இமாச்ச… Read More
வீராணம் ஏரியில் தண்ணீர் திறக்கச் சென்ற அமைச்சரை முற்றுகையிட்ட விவசாயிகள்! November 10, 2017
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியில் தண்ணீர் திறக்கச் சென்ற அமைச்சர் எம்.சி.சம்பத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். ஏரிகள் மற… Read More
நாடு முழுவதும் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை 40 இடங்களில் நிறைவு! November 10, 2017
நாடு முழுவதும் நடைபெற்று வரும் வருமானவரி சோதனை 40 இடங்களில் நிறைவு பெற்றுள்ளதாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இயக்குநர் தெரிவித்துள்ளார்.சென்னை… Read More
பணமதிப்பிழப்புக்கு பிறகு 17 ஆயிரம் கோடி பணம் போலி நிறுவனங்கள் மூலம் கையாடல்! November 10, 2017
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், சந்தேகத்திற்குரிய வகையில், 17 ஆயிரம் கோடி ரூபாய், வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு, மீண்டும் எடுக்கப்பட்… Read More
திப்பு சுல்தானுக்கு விழா - கர்நாடகவில் வன்முறை, 144 தடை, இந்து அமைப்பினர் கைது! November 10, 2017
கர்நாடக மாநிலம் மடிக்கேரியில் அரசு பேருந்துகள் மீது கல் வீசித் தாக்கப்பட்டதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில்… Read More