வெள்ளி, 30 நவம்பர், 2018

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல விவசாயிகள் திட்டம்! November 30, 2018

Image

வேளாண் கடனை தள்ளுபடி செய்யக் கோரி டெல்லியில் குவிந்துள்ள விவசாயிகள், திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை நோக்கி இன்று பேரணியாக செல்வோம் என அறிவித்துள்ளனர்.

விவசாய விளை பொருட்களுக்கு  லாபகரமான விலை வழங்க
வேண்டும் - பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி,டெல்லியில் மாபெரும் போராட்டத்தை அகில இந்திய கிஷான் சங்கம் ஒருங்கிணைக்கிறது. 2 நாட்கள் நடக்கும் இப்போராட்டத்திற்காக நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்து 207 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல லட்சம் விவசாயிகள் டெல்லி வந்துள்ளனர். 

இதனிடையே, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா டெல்லி வந்துள்ளார். போராட்டம் நடைபெற உள்ள ராம்லீலா மைதானத்திற்கு செல்லும் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் பிரச்னையை தீர்க்க பிரதமர் மோடி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். விவசாயிகள் விழித்துக் கொண்டு விட்டதாக தெரிவித்த தேவகவுடா, எப்படி தண்டிக்க வேண்டும் என்பதும் விவசாயிகளுக்கு நன்றாகவே தெரியும் என எச்சரித்தார்