திங்கள், 12 நவம்பர், 2018

​சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 18 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தேர்தல்! November 12, 2018

Image

சத்தீஸ்கரில் நக்சலைட் நிறைந்த பகுதிகளில், இன்று முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  

90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கரில், இன்று 18 தொகுதிகளுக்கும் 20-ந்தேதி 72 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில், 10 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதர 8 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளதால், வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் 1 லட்சம் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்