செவ்வாய், 13 நவம்பர், 2018

​பொன்னமராவதியில் கூலி தொழிலாளியிடம் இருந்து நூதன முறையில் திருட்டு! November 13, 2018

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கூலி தொழிலாளியிடம் இருந்து 38 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் ஒருவர் நூதன முறையில் கொள்ளையடித்து சென்றார். 

பொன்னமராவதியை அடுத்த ஆலவயலைச் சேர்ந்த கூலி தொழிலாளி செல்வி, வங்கியில் இருந்த தனது சேமிப்பு பணம் 38 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு பேருந்து நிலையம் நோக்கி சென்றார். அவ்வழியே வந்த மர்ம நபர் ஒருவர் செல்வியின் சேலையில் அழுக்கு இருப்பதாக கூறி, அவர் கவணத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்து சென்றார். 

இது தொடர்பாக பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.