ஞாயிறு, 11 நவம்பர், 2018

மேட்டூரில் மின்சாரம் உற்பத்தி தினசரி 120 மெகா வாட்டாக உயர்வு! November 10, 2018

Image

மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்ததால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டதையடுத்து நீர் தேக்க மின்நிலையங்களில் இருந்து 120 மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து  வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவானது 2 ஆயிரம் கன அடியிலிருந்து தற்போது 5 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அணை மின்நிலையங்கள் மற்றும் சுரங்க மின்நிலையங்களில் இருந்து தினசரி 120 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.