வெள்ளி, 30 நவம்பர், 2018

திமுக தலைமையில் தோழமை கட்சிகள் கூட்டம்: மேகதாது அணைக்கு எதிராக சிறப்பு தீர்மானம்! November 29, 2018

Image

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து, டிசம்பர் நான்காம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில், மேகதாது அணைக்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உடடினயாக சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.