ஞாயிறு, 11 நவம்பர், 2018

​தமிழகம் முழுவதும் இன்று TNPSC குரூப்-2 எழுத்துத்தேர்வு! November 11, 2018

Image

ஆயிரத்து 199 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான TNPSC குரூப்-2 எழுத்துத் தேர்வு இன்று நடைபெறவுள்ளது.

சார்பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, இந்த குரூப்-2 
தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக 6 லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 2 ஆயிரத்து 868 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

சென்னையில் மட்டும் 247 தேர்வு எழுதும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளை தடுக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள TNPSC அதிகாரிகள், தேர்வு மையங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.