திங்கள், 26 நவம்பர், 2018

கஜா புயல் பாதித்த பகுதிகளில், இன்றுடன் நிறைவடைகிறது மத்திய குழுவின் ஆய்வு! November 26, 2018

Image

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, இன்று நாகை மாவட்டத்தை பார்வையிட உள்ளது.

இன்று காலை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட கிராமங்களில், பாதிப்புகளை பார்வையிடும் மத்திய குழு, பின்னர் மாலையில் காரைக்கால் சென்று, அங்கு பாதிப்புகளை பார்வையிடுகின்றனர். இன்றுடன் தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு ஆய்வு பணியை முடித்துக் கொண்டு புதுச்சேரி செல்லும் மத்திய குழு அதிகாரிகள், அங்கு இன்றிரவு தங்குகின்றன். பின்னர், நாளை டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். 

புயல் சேதம் தொடர்பாக தமிழக அதிகாரிகள் வழங்கிய தகவல்கள் மற்றும் சேத விவரங்களை, நேரில் மதிப்பீடு செய்த விவரங்கள் அடிப்படையிலும், முழுமையான தகவல்களை கொண்ட அறிக்கையை, மத்திய குழு தயாரித்து, நாளை அல்லது நாளை மறுநாள், மத்திய அரசிடம்  சமர்ப்பிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.