புதன், 28 நவம்பர், 2018

பூமியை கண்காணிக்கும் Hy-SIS செயற்கைகோளை நாளை விண்ணில் ஏவுகிறது இந்தியா! November 28, 2018

Image

பூமியை கண்காணிக்கும் Hy-SIS செயற்கைகோள் நாளை பி.எஸ்.எல்.வி-சி 43 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ள நிலையில், அதற்கான 28 மணிநேர கவுண்டவுன் இன்று காலை 5.57 மணிக்கு துவங்கியது.

பூமியின் நிலப்பகுதி, வானிலை உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் Hy-SIS செயற்கைகோளை, பி.எஸ்.எல்.வி-சி 43 ராக்கெட் மூலம் இஸ்ரோ, நாளை காலை 9.57 மணிக்கு விண்ணில் ஏவ உள்ளது. இந்த ராக்கெட் 380 கிலோ எடை கொண்டது எனவும், Hy-SIS செயற்கைகோள் பூமியில் இருந்து 636 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது எனவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Hy-SIS செயற்கைக்கோளோடு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட  8 நாடுகளின் 30 செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்று மைக்ரோ செயற்கைக்கோள் எனவும், மற்ற 29ம் நானோ செயற்கைக்கோள் எனவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.