திங்கள், 26 நவம்பர், 2018

எஸ் பி யதிஷ் சந்திரா இட மாற்றம்! November 26, 2018

Image

சபரிமலை நிலக்கலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ் பி யதிஷ் சந்திரா மாற்றம். ஏற்கனவே வகித்து வந்த திருச்சூர் கமிஷனராக மாற்றி கேரளா அரசு உத்தரவு.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி பாஜகவினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து சரண கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டத்தை கட்டுப்படுத்த நிலக்கல், பாம்பை, சன்னிதானம் உட்பட ஐந்து பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் அங்கு தரிசனத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை நிலக்கல் பகுதியில் தடுத்து அவரை மட்டும் காரில் அனுமதிக்கலாம் என எஸ்பி யதிஷ் சந்திரா கூறியதை தொடர்ந்து அமைச்சருக்கும் எஸ்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் எஸ்பி ஏற்கனவே வகித்து வந்த திருச்சூர் கமிஷனராக மாற்றி கேரளா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் திருச்சூர் எஸ் பியாக இருந்த புஷ்பாகரனை நிலக்கல் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளை மீண்டும் கேரளா சட்ட சபை கூடும் நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்ப உள்ளதால் முன் கூட்டியே அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts:

  • Hadis ஒரு முஸ்லிமுடைய மானத்தோடு விளையாடுவதினால் ஏற்படும் விபரீதங்கள். கிராமவாசிகளில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இன்னின்ன காரியங்களுக்காக… Read More
  • Missing Read More
  • முஸ்லிம்களின் நிலையும் ஊடகங்களின் நயவஞ்சகமும். அவன் பாவம் வாய் பேச இயலாதவன் ஆனால், உழைப்பாளி பார்க்கவே பரிதாபமாக இருந்தான். அவன் பர்ஸில் சொற்பமாகவே இருந்தது பணம். பேருந்தில் ஏறிய அவ… Read More
  • "சோட்டா பீம்" காட்சி படிமங்கள் மூலம் காவிச் சிந்தனையை புகுத்தும் கயமை. இது அவர்களின் ஒரு நூற்றாண்டு திட்டம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே வரைகலையாக… Read More
  • வக்பு உலகிலேயே அதிகமாக வக்பு சொத்துக்கள் உள்ள நாடு இந்தியாதான். அதே வேளையில் ஊழலிலும் முதலிடம் வகிப்பதும் இந்தியாதான். வக்பு என்ற அரபி வார்த்தைக்கு அ… Read More