புதன், 12 பிப்ரவரி, 2020

டெல்லி மக்கள் என் மீது வைத்த நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது: அரவிந்த் கெஜ்ரிவால்

Image
டெல்லி மக்கள் தங்கள் மீது வைத்த நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வெற்றி குறித்து தொண்டர்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், இந்த வெற்றி தமக்கானது அல்ல என்றும்; டெல்லி மக்களுக்கானது என்றும் தெரிவித்தார். டெல்லி மக்கள், வளர்ச்சிக்காக வாக்களித்துள்ளதாக கூறிய கெஜ்ரிவால், நல்ல கல்வியை விரும்பிய மக்கள் அளித்த வெற்றி இது என்றும் பெருமிதம் தெரிவித்தார். 

தேர்தல் வெற்றி மூலம் தெளிவான செய்தி கிடைத்துள்ளதாக கூறிய கெஜ்ரிவால், இதன் மூலம் புதிய வகையான அரசியலுக்கு வித்திட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

credit ns7.tv