ஞாயிறு, 5 ஜூலை, 2020

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை: வைகோ

சாத்தான்குளம் தந்தை - மகன் மரண வழக்கின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.Does Vaiko's pro-Hindu speech signal shift in Dravidian strategy ...

வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் சிக்கி, தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வரும் தமிழர்களை உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பாக நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்களை உடனடியாக மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் காவல்துறை விசாரணையில் மரணமடைந்த வழக்கை அரசை விட, நீதிமன்றம் சரியாக கையாண்டிருப்பதாகக் கூறினார்.வழக்கின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை என்று வைகோ குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

  • இஸ்லாமிய பெண்கள் பாஸ்போர்ட் விசாரனைக்கு காவல்நிலையம் செல்ல தேவையில்லை...! கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தில்லைநகர் காவல்நிலையத்தில் தென்னூர் பகுதி பெண்கள் பாஸ்போர்ட் விசாரணைக்காக நீண்ட நேரம் குற்றவாளி போல காக்க… Read More
  • Quran எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதுடன், நற்காரியங்களையும் செய்து வருகிறார்களோ அவர்களுக்கே நற்பாக்கியமும், நல்ல இருப்பிடமும் உண்டு.(அல்குர்ஆன்: 13… Read More
  • முளைகட்டிய பயறின் முக்கியத்துவம்! தேவையான பயறை வாங்கி வந்து அதனை இரவில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்துவிட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும். இதைத்… Read More
  • கற்றாழை கற்றாழை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டையான சதைப் பற்றுள்ள இலைகளை கொண்ட ஒரு செடி தான். அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஒன்றல்ல இரண்டல… Read More
  • கண மலை முபட்டி 14/04/2015,  இரவு   12:22  முதல் 01: 47 வரை கண மலை ,   … Read More