Home »
» கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! August 27, 2018
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக அரசுக்கு எதிராகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் முரசொலி நாளிதழின் கேள்வி பதில் பகுதியில் பல்வேறு கருத்துகளை கருணாநிதி வெளியிட்டதற்காக அவர் மீது 13 அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கருணாநிதி மறைந்ததால் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நீதிபதி சுபாதேவி உத்தரவிட்டபடி, கருணாநிதியின் இறப்பு சான்றிதழை வழக்கறிஞர் குமரேசன் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதுதொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Related Posts:
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் November 2, 2018
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வரும் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள… Read More
நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிரான வழக்கு: இன்று தீர்ப்பு! November 2, 2018
தேனி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செய… Read More
புதுக்கோட்டையில் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி! November 2, 2018
புதுக்கோட்டையில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை, ப… Read More
பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் புதிய கூட்டணி! November 1, 2018
நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்கள்.தேசிய… Read More
பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க உள்ளோம் : ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு கூட்டாக அறிவிப்பு November 1, 2018
பாஜகவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க உள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நா… Read More