வியாழன், 16 ஆகஸ்ட், 2018

​ராகுல் காந்தியின் பாதுகாப்பு விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! August 16, 2018

Image

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி நிகழ்ச்சியின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது குறித்து, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கருணாநிதி மரணமடைந்ததையடுத்து, அவரது உடல், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கூட்ட நெரிசலில் சிக்கினார். இதுதொடர்பான காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகின. 

இந்த நிலையில், ராகுல்காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக, வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.