புதன், 15 ஆகஸ்ட், 2018

திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா? August 14, 2018

Image

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து ஆகஸ்ட் 16ஆம் தேதி உத்தரவிடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

2017 செப்டம்பர் மாதம் கைதாகி சிறையிலிருந்து வெளியில் வந்தபோது, அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்த வழக்கில் திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமின் கோரி அவரது தந்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆவணங்களை மோசடி செய்து திருமுருகன் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், எனவே சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமின் அளிக்க வேண்டும் என்றும் வாதாடினார். 

இதனையடுத்து, திருமுருகன் காந்திக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக ஆகஸ்ட் 16ஆம் தேதி தீர்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.  

Related Posts:

  • "ஜெய் ஹிந்த்" இந்த வார்த்தை. சுகந்திரத்துக்கு முன்பு நடந்த மத கலவரத்தின் போது இந்துக்கள் தங்கள் வெற்றியை கொண்டாட "ஜெய் ஹிந்த்" சொன்னது தான் இந்த வார்த்தை.1924,1935,1947-48ல எல்லா… Read More
  • குடியரசு தினம் 67வது குடியரசு தினம் கொண்டாடுகிறோம். ஆனால் இன்னும் பயந்து கொண்டு தகுந்த பாதுகாப்புடன் தான் நம் நாட்டின் மூவர்ணம் பூசிய கொடியை ஏற்ற வேண்டிய சூழல். … Read More
  • பெற்றோர்கள் செய்யும் தவறுகள்>> *பிள்ளை தன் தந்தையைப் பார்த்து எனக்கு PHONE வேண்டும் எனக் கேட்டால் தந்தை கேட்கிறார் IPHONE வேண்டுமா?/SAMUNG GALAXY வேண்டுமா? *பெற்றோர்களே! இது ந… Read More
  • சென்னை வெள்ளத்தில் பல உயிர்களை காப்பாற்றிய சென்னை வெள்ளத்தில் பல உயிர்களை காப்பாற்றிய சகோதரர் யூனுஸ் அவர்களுக்கு, வீரதீரச் செயலுக்காக அறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது. … Read More
  • அரசியல் அரசியல் கற்றுக்கொள்ளுங்கள்... அரசியல் பேசுங்கள்.... ஓட்டு வாங்கும் தேர்தல் அரசியல் வேண்டாம்... அது ஒரு மனிதனின் தனித்தன்மையை இழக்க வைக்கும்..... கொள… Read More