வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு! August 31, 2018

Image


வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. 

வருமான வரிச் சட்டத்தின் கீழ், தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் அந்த கால அவகாசமும் இன்றுடன் நிறைவடைகிறது. மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை, தொழில் மூலம் வருமானம் பெறுவோர் இத்தகைய சட்டத்தின் கீழ் வருகின்றனர். 

வருமான வரியை இன்று தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம் கட்ட வேண்டும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் இருப்பவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 லட்சத்திற்கு அதிகமாக இருப்போர் 5 ஆயிரம் ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருமான வரியை செலுத்தாதவர்கள் உடனடியாக இன்றைய தினமே செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.