திங்கள், 20 ஆகஸ்ட், 2018

#சிந்திக்கும்_சமுதாய_மக்களுக்கு #இதில்_படிப்பினை_உள்ளது!! #இறைவேதம்

Image may contain: 2 people, people smiling, outdoor

Image may contain: 4 people, people smiling, people sitting

Image may contain: one or more people and outdoor

Image may contain: one or more people and outdoor


நேற்று வரை இலட்சாதிபதியாக இருந்தவர்கள்
வீடு வாசல் துணிமனிகள் மற்றும் பொருளதாரத்தை இழந்து உதவிக்கரம் கேட்டு இன்று
நிவாரன முகாம்களில் தஞ்சம்.
நேற்று வரையிலும் நம்மைப்போலவே ஒரு அழகிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர்கள்தான்.
புட்டும் கடலைக் கறியும் , மீனும் , மோட்டா அரிசியும் விதவிதமாய் சாப்பிட்டவர்கள்தான்
பிள்ளைகள் விரும்பி கேட்கின்ற ஆடைகளை வித விதமாய் வாங்கிக் கொடுத்தவர்கள்தான்
பிள்ளைகள் விரும்பிக் கேட்கின்ற ஸ்னாக்ஸ்களை , ஃடிபனில் வைத்து பள்ளிக்கு அனுப்பியவர்கள்தான்
ஆனால் இன்று வருவதைத்தான்/ தருவதைத்தான் சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
வீட்டுக்குள் ஓடி விளையாடிய குழந்தைகள் முகாமுக்குள் கிடக்க வேண்டிய நிலை,
விரும்பிய ஆடைகள் வாங்கித்தந்தவர்கள் , வருகின்ற ஆடையை வாங்குகின்ற நிலை,
சாப்பிட அடம்பிடித்த குழந்தைகள் இப்பொழுது பசியால் அழும் நிலையை அவர்கள் வாழ்க்கையில் கண்டிருக்கவே மாட்டார்கள்.
டைனிங் டேபிளில் இருந்து குடும்பமாய் சாப்பிட்டவர்கள்,
வரிசையில் நின்று சாப்பாடு வாங்கும் நிலையை கனவிலும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.
காலம் காலமாய் ,
வருடக்கணக்காய்,
தலைமுறையாய்,
வெளிநாட்டில் தனித்து இருந்து சம்பாதித்தவைகள் எல்லாம்,
ஒரே நாளில் இயற்கை துடைத்து எறிந்து விட்டது...
இது நாம் பரிதாபப்படுவதற்கு மட்டுமல்ல நமக்கும் ஒரு பாடம். மனிதர்களைச் சம்பாதிப்போம்.
எதுவும் நிரந்தரமில்லை
#இன்ஷாஅல்லாஹ்
இதுவும் கடந்து போகும்.