Home »
» கேரள மாநிலத்துக்கு ரூ.700 கோடி நிவாரண உதவி வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்! August 21, 2018
வெள்ளத்தால் சீர்குலைந்த கேரள மாநிலத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. இந்நிலையில் கேரள மாநிலத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், நிவாரணம், மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக ஆலோசிக்க இன்று சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், கேரளாவுக்கு இரண்டாயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் நிவாரண உதவிகள் தேவைப்படுகிறது என்றும் கூறினார். நிவாரண நிதி கேட்டு ஆகஸ்ட் 30ம் தேதி சிறப்பு பிரதிநிதிகளுடன் டெல்லி செல்ல உள்ளதாக தெரிவித்த பினராயி விஜயன், இந்தியாவில் இருந்து வரும் நிதியுதவிகளை கண்டு நெஞ்சம் நெகிழ்வதாக குறிப்பிட்டார். கேரள மாநிலம் குறித்து அபுதாபி அரசர் தினசரி தொடர்பு கொண்டு கேட்டறிவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.
Related Posts:
ஜெய்ராம் ரமேஷின் சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மோடிக்கு ஆதரவான கருத்துகள் மூலம் அம்பலமாகியுள்ளது: கே.எஸ்.அழகிரி August 24, 2019
பிரதமர் மோடியை துதிபாடி பிழைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்… Read More
தமிழக,கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு! August 25, 2019
கேரள மாநிலத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கிடைத்த உளவுத்துறை தகவலையடுத்து, தமிழக- கேரள எல்லையை இணைக்கும் குமுளி சோதனைச் சாவடி… Read More
காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தியும் திரும்பாத இயல்பு நிலை....! August 25, 2019
காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டபோதிலும், ஒரு சில பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை 20-வது நாளாக … Read More
அகதிகள் முகாமில் இருந்து 6 பேர் மாயம்! August 24, 2019
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத… Read More
மேட்டுப்பாளையத்தில் கமாண்டோ படை குவிப்பு....! August 24, 2019
கோவை மேட்டுப்பாளையத்தில் துப்பாக்கி ஏந்திய பிளாக் கமெண்டோ அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் ஊடுருவலைத் தொடர்ந்து தமிழ… Read More