செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

​திமுக தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்க அதிமுகவினர் மீது புகார் கூறுகிறார் ரஜினி August 14, 2018

Image

ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக மீது தேவையற்ற கருத்துக்களை கூறியிருந்தால் ரஜினிகாந்த் நடமாடியிருக்க முடியுமா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் இறுதிச் சடங்கில் முதல்வர் பங்கேற்காதது குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அதிமுக உருவானதே கருணாநிதியால்தான் என்றும் ஒட்டுமொத்த அமைச்சரவையும் இறுதிச் சடங்கில் பங்கேற்றிருக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த் இது போன்று பேசியிருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுவதாகவும் திமுக தொண்டர்களை தன்பக்கம் இழுக்கவே ரஜினி அதிமுக மீது புகார் கூறுவதாகவும் கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் முதல்வர் உத்தரவின் பேரில் தமிழக அரசு சார்பாக மரியாதை அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.