சனி, 18 ஆகஸ்ட், 2018

​இடிந்து விழும் நிலையில் உள்ள திருச்சி கொள்ளிடம் பழைய பாலம்! August 18, 2018

Image

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் உள்ள பழைய இரும்புப்பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. 

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், முக்கொம்பு அணையில் 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்ரீரங்கம் அருகேயுள்ள பழைய இரும்பு பாலத்தின் 18வது தூணில் விரிசல் ஏற்பட்டு உடையும் நிலையில் உள்ளது. 

இந்த பாலம் இடியும் நிலையில் இருந்ததால், அதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டு வாகனங்கள் புதிய பாலத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இன்று அல்லது நாளை மாலைக்குள் பாலம் முழுவதுமாக இடிந்து விழும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நீர்வரத்து குறைந்ததும் பாலம் முழுமையாக இடிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.