திங்கள், 27 ஆகஸ்ட், 2018

என்னை திமுகவில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்: மு.க.அழகிரி August 27, 2018

Image

திமுகவில் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்

மதுரையில், தனது ஆதரவாளர்களுடன் 4வது நாளாக மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், கருணாநிதி இருந்ததால் ஸ்டாலின் செயல் தலைவரான போது எதிர்க்கவில்லை என்றார். 

திமுகவில் தன்னை மீண்டும் இணைக்காவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்த அழகிரி, தொண்டர்களின் கேட்டுக்கொண்டதற்காகவே செப்டம்பர் 5ம் தேதி பேரணி நடத்துவதாக தெரிவித்தார்.