வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

சமூக வலைதள பதிவால் சிங்கப்பூரில் வேலை இழந்த இந்திய வம்சாவளி இளைஞர்! August 30, 2018

Image

சிங்கப்பூரில் வசித்துவரும் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர், கிழிந்த நிலையில் இருக்கும் சிங்கப்பூர் நாட்டு கொடியின் படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததற்காக அவரது வேலை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்துவருபவர் அவிஜித் தாஸ் பட்னயிக். இவர், கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அவர், தான் சிங்கப்பூரில் இருந்தாலும், தாய் நாடான இந்தியாவை மிகவும் நேசிப்பதை வெளிப்படுத்த, கிழிந்த நிலையில் சிங்கப்பூரி கொடிகள் இருப்பது போலும், அதற்கு அடியில் இந்தியக்கொடி தெரிவது போலும் இருக்கின்ற புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

அதனை கண்ட பலர் அதற்கு கண்டனங்களை தெரிவித்தவண்ணம் இருந்தனர். அதுமட்டுமல்லாமல், இது சிங்கப்பூர் கொடியை இழிவுபடுத்துவது போல் உள்ளது எனக்கூறி அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர்