திங்கள், 20 ஆகஸ்ட், 2018

​மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்த கேரள மக்களை படகில் மீட்ட கன்னியாகுமரி மீனவர்கள்! August 20, 2018

Image

கேரள மாநிலம் திருச்சூரில் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்த 500-க்கும் மேற்பட்ட மக்களை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இரண்டு நாட்டு படகுளை கொண்டு மீட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த  மீனவர் அந்தோணி தலைமையிலான மீனவர் குழுவினர்,  இரண்டு நாட்டு படகுகளை கொண்டு, கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒருபகுதியாக திருச்சூர் பகுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பல நாட்களாக அவதியுற்று வந்த 500-க்கும் மேற்பட்டோரை இக்குழுவினர் மீட்டனர். இதனை தொடர்ந்து இக்குழுவின் ஒரு பிரிவினர், எர்ணாகுளம் மாவட்டத்தின் மீட்பு பணிகளில், இன்று ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.