Home »
» டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்! August 27, 2018
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு பிற்பகுதியிலும், மக்களவைக்கு அடுத்த ஆண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து இன்றைய அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இதற்காக தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாக்குசீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்தும், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. வேட்பாளர்களின் செலவு, வேட்பாளர்களின் விளம்பரம் தொடர்பாக பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு, ஆன்லைன் பிரச்சாரம் குறித்து ஆலோசிக்கபடலாம் என தெரிகிறது
Related Posts:
பேராசிரியருக்கு சிறை தண்டனையா ஒரு விளக்கம் !
கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் 30 தேதி கோவையில் முஸ்லிம்களுக்கெதிராக காவி பாசிச சக்திகளும்,காவல்துறையின்… Read More
உங்களுக்கு எதிராக இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் இறைனிடத்தில் கையேந்துவோம்..
உலகின் மிகப்பெரிய கலவரம் #குஜராத்_2002_கலவரம்
ஆறாத ரனம்; மாறாத மனம்..
பச்சிழம் குழந்தை என்று பார்க்காமல் கொடுரமாக கொலை செய்தது; கருவை கிழித்த… Read More
ஆம்புலன்ஸ் சேவையைப் பெற இனி ஆதார் அவசியம்! June 20, 2017
உத்தரபிரதேச மாநிலத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அவசர உதவிக்காக ஆம்புலன்ஸை அழைப்பவர… Read More
மாட்டிறைச்சிவிவகாரம், முஸ்லிம்களின் முத்தலாக் விடயம் தொடர்பாக ஒரு இந்து சகோதரி என்ன கூறுகின்றார் என கேளுங்கள்.
… Read More
1 லட்சம் பிளாஸ்டிக் குண்டுகளை காஷ்மீருக்கு அனுப்பிய மத்திய அரசு! June 20, 20171 லட்சம் பிளாஸ்டிக் குண்டுகளை காஷ்மீருக்கு அனுப்பிய மத்திய அரசு! 1 லட்சம் பிளாஸ்டிக் குண்டுகளையும், மிளகாய் நிரம்பிய PAVA குண்டுகளையும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. காஷ்மீரில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதால் மத்திய அரசு கடும் விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், பெல்லட் குண்டுகளை விட ஆபத்து குறைவான பிளாஸ்டிக் குண்டுகளையும், மிளகாயில் இருந்து எடுக்கப்படும் வேதிப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் PAVA குண்டுகளையும் காஷ்மீர் போராளிகள் மீது பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. பிளாஸ்டிக் குண்டுகள் பரீட்சார்த்த முறையில் சோதிக்கப்பட்டு விட்டதாகவும், பெல்லட் குண்டுகளை பயன்படுத்துவதற்கு முன்பாக பிளாஸ்டிக் குண்டுகளை பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க முயற்சிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாதாரண AK-47 ரக துப்பாக்கிகளில் இருந்தே பிளாஸ்டிக் குண்டுகளை பயன்படுத்த முடியும் என்றும், ஆனால் இவைகளை பயன்படுத்தும் போது ஒருமுறை மட்டுமே சுட முடியும் என்றும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக கூட்டத்தை கலைக்க ராணுவத்தினால், புகை குண்டுகள், PAVA குண்டுகள், ரப்பர் குண்டுகள், கேஸ் குண்டுகள், பிளாஸ்டிக் குண்டுகள் மற்றும் பெல்லர் குண்டுகளை பயன்படுத்த இயலும்.
1 லட்சம் பிளாஸ்டிக் குண்டுகளையும், மிளகாய் நிரம்பிய PAVA குண்டுகளையும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. காஷ்மீர் பள்… Read More