சனி, 25 ஆகஸ்ட், 2018

கடைமடைக்கு நீர் வராமல் போனதற்கு முறையாக தூர் வாராததே காரணம்: ஜி.கே.வாசன் August 25, 2018

Image

தஞ்சை மாவட்டத்தில் கடைமடைக்கு நீர் வராமல் போனதற்கு முறையாக தூர் வாராததே காரணம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். 

தஞ்சை மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியான செல்லிக்குறிச்சி ஏரியை இருசக்கர வாகனத்தில் சென்று வாசன் பார்வையிட்டார். 320 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி வறண்டு கிடப்பதை பார்வயிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வாசன், மேட்டூர் அணை நிரம்பாத காலத்தில் கூட இந்த ஏரியில், நீர் நிறைந்திருந்ததாக கூறினார். 

கால்வாய்களை முறையாக தூர் வாராததே கடைமடைக்கு நீர் வராததற்கு காரணம் என்று குற்றம்சாட்டிய அவர், காமராஜர் சொன்ன ராசிமணல் அணை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.