வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

​மதுரை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டிப் பாலத்திற்கு வந்தடைந்தது வைகை நீர்! August 31, 2018

Image

வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மதுரை மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தொட்டிப் பாலத்திற்கு முதன்முறையாக வந்தடைந்துள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக, வைகையிலிருந்து உபரி நீராக வெளியேறும் நீரை உசிலம்பட்டி பகுதி மக்களின் விவசாய பாசனத்திற்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். அதன்பேரில் 1996ம் ஆண்டு 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 58 கால்வாய் திட்டப்பணி துவங்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 31ம் தேதி இத்திட்டப் பணிகள் முடிவுற்றது. 

இதனையடுத்து வைகை அணையிலிருந்து கடந்த 22ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்த கால்வாயில் நீரை திறந்து வைத்தார். இந்நிலையில் இந்நீரானது புதிதாக கட்டப்பட்ட தொட்டிப் பாலத்திற்கு வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு வருகின்றனர்.