புதன், 12 ஆகஸ்ட், 2020

ஆதிச்சநல்லூரில் 3,000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள், கூரைஓடுகள் கண்டெடுப்பு!


Image

ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் மற்றும் கூரை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது ஆதிச்சநல்லூரில் தமிழக அரசு சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை இயக்குனர் பாஸ்கர், ஆய்வாளர் லோகநாதன் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பு மற்றும் வெண்கலத்தாலான பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் தற்போது 3000 ஆண்டுகள் பழமையான குறியீடுகள் மற்றும் கூரை ஓடுகள் இங்கு கிடைத்துள்ளது. அந்த குறியீடுகளில் ஏணி, இலை போன்று வரையப்பட்டுள்ளது. கீறல்கள் மற்றும் குறியீடுகளை ஆய்வு செய்யும்போது பழங்கால மனிதர்களின் வாழ்வியல் குறித்த முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு நடந்த அகழாய்வு பணியில் கரும்பு, மான், முதலை, பெண் உருவங்கள் இருந்த பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Posts:

  • புதினா அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்று. தனது முகம் மற்றும் உடலை அழகாக வைத்துக்கொள்வதற்காக பலரும பலகையான கிரீம் மற்றும் இதர பொருட்களை பயன்படுத்தி … Read More
  • எலக்ட்ரிக் பஸ் திட்டம்; அமைதியாக கைவிடும் தமிழக அரசு! கடந்த ஆண்டு, கனரக தொழில்களுக்கான மத்திய அமைச்சகம் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், திருச்சி, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்… Read More
  • #JusticeforSabiya #JusticeforSabiyaபத்திரிக்கை அறிக்கை04/09/2021பெண்களின் கற்பையும், உயிரையும் பாதுகாக்க வக்கற்ற அமித்ஷா பதவி விலக வேண்டும்!தேசிய தவ்ஹீத் கூட்டமைப… Read More
  • தேசவிரோத சக்திகளுடன் இன்போசிஸ் கூட்டணி ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த ‘பாஞ்சஜன்யா’ வார இதழின் சமீபத்திய பதிப்பில், முதல்முறையாக ஒரு முன்னணி நிறுவனத்தை தேச விரோத சக்திகளுடன் இணைந்துள்ளதாக மு… Read More
  • சேப்பாக்கம் கெஸ்ட் ஹவுசில் பரபரப்பு 24 years old cop shoots self to suicide at Chepauk guest house Tamil News : சென்னை சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை பாதுகாப்புப் பணியிலிருந்… Read More