ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

இ-பாஸ் தேவையில்லை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

 மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்கள் விட்டு மாநிலம் செல்வும், இ-பாஸ் நடைமுறை தேவையில்லை என் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய உள்துறை அமைச்க செயலாளர் அஜய் பல்லா மாநில தலைமைச்ச செயளாலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டாம் எனவும், மாநிலங்களுக்குள் பொது மக்கள் நடமாட்டத்திற்கு தடை ஏற்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், மாநில அரசுகளின் செயல்பாடுகளினால்  சரக்கு போக்குவரத்து தடைபடுவதாக கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு, வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது. மாநில அரசின் கட்டுப்பாடுகள் மத்திய அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.