வியாழன், 27 ஆகஸ்ட், 2020

நாடு முழுவதும் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

 நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாட 7 மாநில முதலமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் இந்தாண்டு தேர்வு நடத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து பா.ஜ.க. ஆளாத 7 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். காணொலி மூலம் பிற்பகலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட முதலமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாட 7 மாநில முதலமைச்சர்களும் முடிவு செய்துள்ளனர்.

Related Posts:

  • மும்பை துப்பாக்கி சூடு பிரபல மும்பை துப்பாக்கி சூடு தீவிரவாதி அஜ்மல் கசாப் இஸ்லாமியனா?? இல்லவே இல்லை இந்துத்துவா தீவிரவாதிதான் என்று கசிந்த உண்மை மறைத்த மத்திய அரசு!!… Read More
  • மிர்ஜா குலாம் அஹ்மது அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம் அஹ்மது -  என்கின்ற ஹராமி. அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே நாம் அனைவரும் பிறப்பின் அடிப்பட… Read More
  • போர்கள் பெரும்பாலான போர்கள் பிரதேசத்தில், வளங்களை அல்லது அரசியல் சுதந்திரம் போன்ற கடுமையான பிரச்சினைகளை போராடிய, ஆனால் மற்றவர்கள் விநோத கூட நகைப்புக்கிடமான ச… Read More
  • பிரார்த்திக்கும்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் யாரும் பிரார்த்திக்கும்போது "இறைவா!நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!இறைவா! நீ நினைத்தால் எனக்குக்கரு… Read More
  • Bye to தந்தி சேவைகள் இந்தியாவில் "டார்" என்று அழைக்கப்படும், தந்திகள் 1850 ல் இந்தியர்கள் நல்ல, கெட்ட, ஆனால் எப்போதும் அவசர-செய்தியை கொண்டு, 160 ஆண்டுகளுக்கும் மேலாக இருந… Read More