ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

இன்று பாலிடெக்னிக் தேர்வு முடிவு: இணையதளத்தில் ‘செக்’ செய்வது எப்படி?

 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மற்றும் அனைத்து துணை நிலை மாணவர்களை தவிர்த்து, முழு நேர மற்றும் பகுதி நேர டிப்ளமோ படிப்புக்கான 2020 ஏப்ரல் மாத தேர்வு முடிவு இன்று (ஆகஸ்ட் 30) வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகள், சுயநிதி பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தேர்வு நடத்துகிறது.

பாலிக்டெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளம் மூலம் வெளியிடப்படுகிறது.

 

இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தவிர மற்றவர்களுக்கு(ரெகுலர்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வு முடிவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் //www.tndte.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் பார்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.